×

தேர்தல் பணத்தை சுருட்டியதாக பாஜ தலைவருக்கு எதிராக போஸ்டர்: ஆத்தூரில் பரபரப்பு

ஆத்தூர்: பாஜவின் பணத்தை சுருட்டியதாக பாஜ சேலம் கிழக்கு மாவட்ட தலைவருக்கு எதிராக அக்கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் ேதர்தல் கடந்த மாதம் 19ம்தேதி நடந்து முடிந்தது. இந்த ேதர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஜ தலைவர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாகவும் செயல்பட்டனர். இவர்களுக்கு தேர்தல் செலவினம் என்ற பெயரில் கட்சி தலைமை ஒரு பெரும் தொகையை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட மாவட்ட தலைவர்கள் அதை செலவிடாமலும், தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பிரித்துக் ெகாடுக்காமலும் அமுக்கி கொண்டதாக மாநிலம் முழுவதும் புகார்கள் எழுந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைவர்கள் மீது புகார் தெரிவித்து பாஜவினர் பரபரப்பு போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். இந்த வகையில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முகநாதன் குறித்து ஆத்தூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு போஸ்டரில்,‘பிஜேபியின் பணத்தை கொள்ளையடித்த மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியில் இருந்து நீக்கு,’என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு போஸ்டரில்,‘ பாஜ கூட்டணியின் வெற்றிக்கு உழைக்காமல் எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து, நமது கட்சி நிர்வாகிகளை மாற்று கட்சிக்கு ஓட வைத்த சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியை விட்டு நீக்கு,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள ஆத்தூர், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

இங்கு பாஜ கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக தேவதாஸ் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷமிகளின் திட்டமிட்ட சதி: சண்முகநாதனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘எங்கள் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட நபரிடம் வரவு,செலவுகளை ஒப்படைப்பது கிடையாது. கட்சி மேலிடம் அமைத்துள்ள மையக்குழு மூலமே செலவினங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் எனக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு விஷமிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது குறித்து ஆத்தூர் போலீசாரிடம் புகார் ெதரிவித்துள்ளேன்,’’ என்றார்.

சிவகங்கை பாஜ மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
சிவகங்கை பாஜ மாவட்ட செயலாளர் சேதுசிவராமன். மக்களவை தேர்தலில் கொடுக்கப்பட்ட நிதியை மண்டல தலைவர்கள் சுருட்டி விட்டதாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். பாஜ வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டு, மாநில தலைமை இப்புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சேதுசிவராமன், மண்டல தலைவர்களிடம் நிதி முறைகேடு செய்ததாகவும், இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபட்டு பலமுறை மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில் மீண்டும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து வருவதால் மாவட்ட செயலாளரான சேதுசிவராமன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

மேலும் இவர் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க பரிந்துரைப்பதாகவும், பாஜ சிவகங்கை மாவட்டத்தலைவர் சக்தி (எ) சத்தியநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு வழங்கிய பணத்தை முறையாக செலவு செய்யாமல் சுருட்டி விட்டதாக கூறிய மாவட்ட நிர்வாகியை, இவர் தான் முறைகேடு செய்தார் எனக்கூறி நீக்கம் செய்துள்ளது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தேர்தல் பணத்தை சுருட்டியதாக பாஜ தலைவருக்கு எதிராக போஸ்டர்: ஆத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Salem East ,India ,Tamil Nadu ,Attur ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...